Thursday 26 August, 2010

ஏன்




என் வாழ்வினில் சிறப்பானதேன்?
உனை நெஞ்சம் ரசித்த நொடி

என்  நெஞ்சமும்  மறக்காததேன் 
நம் முதல் சந்திப்பினை

என் செவிகளும்  சேமித்ததேன்?  
 உன் முதல் வார்த்தைகளை

என் கால்களும் கெஞ்சுவதேன்
 உன் வீடு நோக்கி செல்ல

என் நாணமும் மிஞ்சுவதேன் 
உன் விழிகளை பார்க்கையிலே

Thursday 5 August, 2010

மாற்றப்படாத நியதிகள்



மான் கொன்று,
மரம் துளைத்து,
புலி மீது வில் பாய செய்ய
வித்தகன் இன்று இல்லை

ஆனால் வள்ளுவனின் வாசுகியாய் இன்றைய பெண்ணும்
இருக்க வேண்டுமென வரையறை செய்வார்

கல் தூக்கி தீரம் காட்ட,
ராமன் போல் ஒழுக்கம் கொள்ள,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு பெண்ணும் நிலம் பார்த்து பேச,
நிலமகள் நோகாமல் நடக்க வேண்டுமென்பார்

நீதியோடு வரி கட்ட,
நியாயதோடு ஓட்டு போட,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு ஆளுமையும் மனுநீதிசோழனின்
காலத்திற்கு நிகராய் இருக்க வேண்டுமென்பார்

இவை யாவும்  மாற்றப்படாத நியதிகள் 
மற்றும் மாற்றமுடியா நியதிகள்

Wednesday 4 August, 2010

துவக்கமும் முடிவும்

அன்பின் அழகே
சர்வமும் அழகு உன் கருவிழிக்குள்ளே

கருவிழி சிறையினுள் சிக்கி கொண்டேன்
மீள வழி இருந்தும் விருப்பம் இல்லை

இல்லை என் நினைவில் வேறொன்றும்
உனை பற்றி நினைக்க துவங்கினால்

துவங்குவேன் ஒவ்வொரு பொழுதையும் உன்
மலர்ந்த புன்னகை முகம் பார்த்து

பார்த்து பார்த்து சேகரித்து கொண்டேன்
உன் வார்த்தைகளில் இருந்த அன்பை

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle