Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Friday, 26 November 2010

வாய்ப்பு


"ஏய் பவித்ரா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?", குழப்பமாய் கேட்டான் வர்ஷன்.

"
இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன்", தெளிவாய் சொன்னாள் பவித்ரா.

"
இப்போ உனக்கு என்ன குறைன்னு, வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற?", என்றவனிடம்

"
ஒண்ணும் இல்லைங்க, நம்ம கிட்ட குறை ஏதும் இல்லையே நிறைய பணம்தான் இருக்கு, அப்புறம் என் வீணா கஷ்டப்படணும். அதுவும் இல்லாம நாம கனடா போக போறோம், அங்கேயே குடியுரிமை கூட கிடைச்சுடும், நல்லா நிறைய சம்பாதிக்கலாம்....", பவித்ரா சொல்லிக்கொண்டே  போக வர்ஷன் இடைமறித்தான்.

"நிறுத்துடி பணம் இருந்தா தாய்மை உணர்வு இல்லாம போய்டுமா?".

"பணம் குடுத்தா நமக்கு நல்லா ஆரோக்யமான குழந்தை பெற்றுத்தர வாடகை தாய் இருக்காங்க. அப்புறம் என்ன?",

"ஐயோ, நிறுத்து பவித்ரா. நம்ம குழந்தையை நீயே சுமந்து பெத்து, அதுக்கு எல்லாம் பார்த்து பார்த்து நாமலே செய்யறதுலதான் உண்மையான இன்பம் இருக்கு.", என்றான் வர்ஷன் கெஞ்சலாக.

"பணம் இருக்கறதால தான உங்க அம்மா , அப்பா ரெண்டு பேரையும் இங்க நல்லா வசதியான முதியோர் இல்லாமா பார்த்து விட்டுட்டு , நாம வெளிநாடு போலாம்னு சொல்றீங்க", என்றாள் பவித்ரா ஏளனப் புன்னகையுடன்.

"அவங்களை இங்க நல்லா பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அந்த நாட்டின் தட்பவெட்ப நிலை இவங்களுக்கு ஒத்துக்காதுமா. இதுக்காக கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறது அபத்தம் பவித்ரா.", என்றான் வர்ஷன் தன்  முடிவை நியாயப்படுத்தும் விதமாக.

"
அடுத்தவங்க, நல்லா பார்த்துப்பாங்கதான், ஆனா அவங்களோட அந்திம காலத்துல நாமலே இருந்து பார்த்துக்கற மாதிரி வராதுங்க. எப்படி நம்ம குழந்தையை நான் ஆரோக்யமா இருக்கும் போது, வாடகை தாய் மூலமா பெத்துக்கறது அபத்தமோ, அதே மாதிரி பெத்த பிள்ளைகள் இருக்கும் போது அவங்களை முதியோர் இல்லத்தில் விடறதும் அபத்தம்தான்.", என்றாள் பவித்ரா உறுதியுடன்.

அமைதியாக இருந்தவனிடம், " என்ன பதில் பேச முடியலையா?. இங்கயே நாம நல்லா வாழற அளவுக்கு சம்பாதிக்கலாம். பணம் இருக்கேன்னு உங்க அம்மா, அப்பா உங்களை வேளைக்கு ஆள் வச்சு பார்த்துக்கலையே?. உங்களுக்கு எல்லாமே அவங்களே பார்த்த பார்த்து செஞ்சாங்க. இப்போ உங்க சந்தர்ப்பம். நீங்க அவங்களை கவனிச்சுக்கணும். இப்போ நழுவறது தப்பா தோணலையா?", என்றவளை ஒருவித தெளிவுடன் பார்த்தான் வர்ஷன்.

"
என்னடா வெளிநாடு போற வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டதா பவித்ரா சொன்னா?", என்றார் வர்ஷனின் அம்மா

"
ஆமாம் , உங்களையும் அப்பாவையும் தனியா விட்டுட்டு எங்களுக்கு அங்க போக பிடிக்கலமா", என்ற வர்ஷன் பவித்ராவை நன்றியுடன் பார்த்தான்.

வர்ஷனின் தாய் கண்கள் நிறைய பெருமிதத்துடன் அவனை பார்த்தார்

 

Sunday, 6 June 2010

ஞாபகம் வருதே



அனைவருக்கும்
பள்ளி வாழ்கை என்பது மறக்க முடியாத ஒன்று தானே. அதே போல்தான் எனக்கும் அந்த குறிபிட்ட நாள் 6 வருடமாகியும் மறக்க முடியாத ஒன்றாக ஆனது.

நான் இப்படி எல்லாம் முன்னுரை கொடுக்கவும் ஏதோ நான் வாழ்கையில் மிக பெரிய சாதனை செய்த நாள்னு மட்டும் நினைக்க வேண்டாம். அன்னைகுதான் நாள் முழுக்க கைப்புள்ள மாதிரி சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் அடி வாங்கினேன். சரி உள்ள போவோமா ...

சரி எல்லாரும் கண்ணுக்கு முன்னாடி கொசுவர்த்தி சுருள சுத்தவிடுங்க, அப்புறம் ஆட்டோகிராப் music கண்டிப்பா bockground-ல ஓடணும் (நம்ம பாரம்பரியத்தை மறக்க கூடாதுல)

அப்போ நான் 11-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேங்க. எப்பவும் போல இல்லாம அன்னைக்கு கொஞ்சம் வேகமா துயில் எழாமல் போனதனால அம்மா ரொம்ப பாசமா என்ன அடிச்சு எழுப்பினாங்க. கூடவே நாலு நல்ல வார்த்தை வேற ."அடியே குட்டிபிசாசு, எரும மாடு மாதிரி விடிஞ்சது கூட தெரியாம தூங்கிட்டு இருக்கியே,......(இப்போ கன்னத்துல பாசமா தட்டி, செல்லமா காதை திருகறாங்க -பின்குறிப்பு:ஆனா ரொம்ப வலிச்சது) பொட்ட புள்ள இப்படி தூங்கினா வீடு உருபடறதுக்கா எழுந்திரி டி....

இப்பவும் எழுந்திரிகலைன்னா அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியும்(அது எங்க குடும்ப ரகசியம் வெளில சொல்றதில்லை ) அதனால் நான் கொஞ்சம் கெத்த maintain பண்ணிட்டு எதுவுமே நடக்காத மாதிரி எழுந்திரிச்சேன்.

ரொம்ப அவசரபடாம கிளம்பி, make up எல்லாம் முடிச்சுட்டு கடிகாரத்தை பார்த்தா........ மணி 8.45.

"ஹையோ இன்னும் 15 நிமிஷத்துக்குள்ள போகலைனா அந்தர சல்லி ஆகிடுவியே மிதிலா", இப்படி mind voicela கூவிகிட்டே booksa எல்லாம் பைக்குள்ள அடுக்காம அப்படியே தூக்கி போட்டுகிட்டு baga cycle carrierla மாட்டுனவ அப்படியே போய் இருந்தா எந்த அக்கபோரும் அன்னைக்கு நடந்தே இருக்காது . ரொம்ப நல்ல பொண்ணா "அம்மா schoolku போய்ட்டு வரேன்னு", கத்த
அங்க தான் கதைல turning pointe.

"அடியே காலைல சாப்பிடவே இல்ல சாப்பிடாம போனா உன்ன சாயங்காலம் வீடுக்குள்ள விட மாட்டேன்", என்றபடி அம்மா ஓடி வந்தாங்க

" ய்யோ அம்மா late ஆகிடுச்சு.......", நான் முடிக்கறதுக்குள்ள என் காதை பிடிச்சு திருகி கிட்டே உள்ள கூட்டிட்டு போனவங்க ஒரு தட்ல சாப்பாட போட்டு
ஊட்டி விட்டங்க. இவ்ளோ பாசமா ஊட்டி விடறாங்களேன்னு மட்டும் நினைக்காதீங்க,
"விவசாயி நாத்து நடறது, களை பறிக்கறது , பூச்சி மருந்து அடிக்கறதுல இருந்து ஆரம்பிச்சு.......அதை எங்கப்பா கஷ்டபட்டு schoola பசங்களை அடிச்சு வாத்தியார் வேலை பார்த்து வாங்கின சம்பளத்துல(இருங்க மூச்சு விட்டுக்கறேன்) , அரிசி கடைல போய் அரிசி வாங்கின வரைக்கும் சொல்வாங்க. அத்தனையும் நான் அடி வாங்கி கிட்டே கேட்கணும், சாப்புட வேற செய்யணும், கூடவே வலி தாங்காம அழுகற மாதிரி நடிக்க வேற செய்யணும். ஒரு 16 வயசு பொண்ணு எப்படிங்க இப்படி multiple role பண்ண முடியும், கஷ்டமில்ல(நீங்க அழாதீங்க, கதைய கேளுங்க)

இப்படியே நான் சாபிட்டு முடிக்க 9 மணி ஆகிடுச்சு. அவசர அவசரமா cycle-a எடுத்துகிட்டு schoolku 5 நிமிஷத்துல போய் சேர்ந்தா அங்க classla prayer நடக்குற சத்தம் கேட்டது.என்ன மாதிரியே இன்னும் ரெண்டு பொண்ணுங்க , நாலு பசங்கனு size வாரியா தயங்கி தயங்கி வந்துகிட்டு இருந்தாங்க.

"கடவுளே என்ன மட்டும் காப்பாத்து", அப்படின்னு ரொம்ப நல்ல மனசோட வேண்டிகிட்டு அப்படியே cylce stand பக்கமா போனா அங்க ரொம்ப strictana P.T sir ரவி நின்னுகிட்டு இருந்தாரு. கைல மாட்டை அடிக்கற மாதிரி பெரிய பிரம்பு வேற.
அவர் ஏற்கனவே late-a வந்த பசங்க duck walk பண்றத பார்த்துகிட்டு இருந்தாரு .

பசங்க எல்லாம் காதுல கை வச்சுக்கிட்டு வாத்து மாதிரி நடக்குறதை பார்க்க சிரிப்பா வந்தது. அட என்னை கெட்டவள்னு நினைக்காதீங்க
"துன்பம் வரும் வேலையிலே சிரிங்க " , அப்படின்னு
பெரியவங்க சொல்லி இருக்காங்க (அது யாருக்கு துன்பம் வரும் போதுனு சொல்லலியே.......)

ரவி sir கண்ணுல படாம அப்படியே nicea.... es ஆகிடலாம்னு பார்த்த நான் பழக்க தோசத்துல cycle standல நின்னுகிட்டு இருந்த நாலு cyclea தள்ளி விட்டுட்டு என்னோடதை வைச்சேன..... சத்தம் கேட்டு திருமபிட்டார் நம்ம கதையோட தற்போதய வில்லன் ரவி sir,

"யே யாரது..... பொட்ட புள்ளைக கூட வேகமா வாறது கிடையாது.. யாரு அழகரா வா வா(என் அப்பா அழகர்சாமி அந்த schoola தான் வாத்தியாரா இருந்தாரு ... அதனால அங்க நான் கொஞ்சம் popularunga. எல்லாரும் என்னைய "அழகர்"னு -தான் கூப்பிடுவாங்க )

இப்போ புது பலியாடு மாட்டினதால ரொம்ப சந்தோசமா என்னை நோக்கி வந்தவரு "வாத்தியார் புள்ளையே இப்படி சாவகாசமா வந்தா மத்த புள்ளைக கெட்டு போய்டாது"- வாய் பேசிட்டு இருக்கும் போதே அவர் கைல இருந்த பிரம்பு என் முட்டிக்கு கீழ பேச ஆரம்பிச்சது.....அப்படியே நாலு அடி வாங்கின நான் வாயை மூடிட்டு சும்மா இருக்காம
"sir sir உடம்பு சரி இல்லை அதான்...."-அப்படின்னு இழுத்தேன்.

"என்ன கழுத உடம்புக்கு" அப்படின்னாரு கொஞ்சம் கூட கரிசனமே இல்லாம.

இப்படி கேட்டதுல confuse ஆனா நான் "அ..அ..து வந்து காது வலி sir", அப்படின்னு நெத்தியில கை வைக்க "அப்போ உனக்கு காது என்னை மூளை இருக்கற இடத்துலையா இருக்கு", அப்படின்னு கேட்டு மாத்தி மாத்தி அடிச்ச இடத்துலேயே அடிச்சாரு.

வலி தாங்காம நான் குதிக்க என்னோட நீளமான சடையும் சேர்ந்து ஆடிச்சு. அங்கதான் வச்சாரு கடவுள் எனக்கு அடுத்த ஆப்பு.

என்னோட நீளமான கூந்தல் தெரியணும்னு ribbon வச்சு மடிச்சு கட்டமா அப்படியே விட்டுருந்த ஜடையை பார்த்தவரு "school rules உனக்கு தெரியாது என்ன style வேண்டி இருக்கு உனக்கு......இந்த பொட்ட கழுதைகளே இப்படித்தான்..", இன்னும் நாலு அடி அதிகமா வாங்கினேன்.

அதுக்குள்ள prayer முடிஞ்சு bell அடிக்க "போய் தொலை classku" அப்படின்னு பெரிய மனசு பண்ணி விட்டாரு . கூடவே என் பின்னாடி அடி வாங்க readya நின்னுகிட்டு இருந்த மத்த பசங்களையும் சேர்த்து விட,

"கடவுளே you too ", அப்படின்னு மேல இருக்கறவரை திட்டிகிட்டே கிளாஸ் ரூம்க்கு வந்து சேர்ந்தா அங்க அடுத்த ஆப்பு காத்துகிட்டு இருந்தது..honeybell ரூபத்துல......(எங்க கிளாஸ் teacher தேன்மணி அவர நாங்க செல்லமா honeybell-னு தான் சொல்வோம்).

"May I come in sir ",அப்படின்னு மெதுவா சொன்னேன் ஒட்டு மொத உலகத்துலயும் நான்தான் அப்பிராணி பொண்ணு மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு.

slow motionla திரும்பி பார்த்த honeybell, என்னை பார்த்ததும் ஏதோ அவர் வீட்டுல புகுந்து கொள்ளை அடிச்ச திருடனை பார்க்கற மாதிரியே பார்த்தாரு...என்னை நோக்கி வந்தவரு, கைல இருந்த english bookala என் தலைல நாலு தட்டு தட்டினாரு . அவர் ஒவ்வொரு தடவை தட்டும் போதும் என் மூக்குகண்ணாடி நழுவி கீழே போக அதை நான் சரி பண்ணிகிட்டே அடி வாங்கினேன். இது ஏதோ பெரிய நகைச்சுவை மாதிரி classla இருந்த எல்லாரும் சிரிச்சாங்க(அதுவும் முக்கியமா நாலு பசங்க ரொம்ப சிரிச்சானுக, அவிங்க எல்லாம் எங்க அப்பாகிட்ட அடி வாங்கினவைங்க ) "பன்னி பன்னி என்னைக்காவது ஒழுங்கா இருக்கியா, நீ நேத்து கூட late ஆ தான வந்த", அப்படின்னாரு.

"இல்ல sir", அப்படின்னு பம்மிங்க்ஸ் of இந்தியாவா மாறி சொன்னேன்.

"உன்னை எல்லாம் இப்படியே விட்டா சரிப்பட மாட்ட",
"அச்சோ என்ன பண்ண போறாரு ", இது என் mind voice,
"உங்க அப்பா கிட்ட சொன்னாதான் நீ சரிபட்டு வருவ",
"ச்சே இவ்ளோதான, நான் என்னமோ ஏதோனு பயந்து இல்ல போய்டேன்", mind voice,

ஒரு வழியா பெரிய மனசு பண்ணி என்னை என் இடத்துல போய் உக்கார விட்டாரு.
சரி இனிமேலாவது இந்த நாள் இனிய நாளாக இருக்கணும்னு நினைச்சுட்டு போய் உக்கார்ந்தா

"செம்ம காமெடி டி", என்று எனக்கு ரெண்டு பக்கமும் உக்காந்து இருந்த temprary துரோகிகள்
சிரிச்சாங்க. கடுப்பை control பண்ணிட்டு english booka எடுத்து வச்சா honeybell கிட்ட இருந்து அந்த கொடூர வார்த்தைகள் வந்தது

"எல்லாரும் நான் சொன்ன அந்த ரெண்டு essay படிச்சிட்டு வந்துடீங்களா. போய் வரிசையா உக்கார்ந்து எழுதுங்க போங்க", அப்படின்னு சொன்னாரு. எல்லாரும் ஏதோ எங்களுக்கும் அந்த situation-க்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி குனிஞ்ச தலை நிமிராம உக்காந்திருந்தோம் ஒரு சில கெட்ட தோழர், தோழிகளை தவிர.

"என்ன அந்த 8 பேர் தவிர வேற யாரும் படிச்சுட்டு வரலையா. காலைல வந்த உடனே .................", இப்படி ஆரம்பிச்சவரு தொடர்ந்து 5 நிமிஷம் பேசினாரு. அப்போ அதெலாம் காதுல விழாததினால இப்போ நியாபகம் இல்லை.

"எல்லாரும் வந்து முட்டி போடுங்க", அவர் கடைசியா சொன்னது மட்டும் காதுல விழுந்தது. வேற வழி இல்லாம பசங்க எல்லாம் class-ku வெளியிலும், பொண்ணுங்க உள்ளும் முட்டி போட்டோம்.

"ச்சே இன்னைக்கு நேரமே சரி இல்ல", இப்படி நிறைய பேரோட mind voice கேட்டது.

ஒரு 10 நிமிஷம் போயிருக்கும் , அப்போன்னு பார்த்து சரியாய் ஆஜரானான், என் அப்பாவோட மதிப்பிற்குரிய மாணவன் ஒருத்தன்.

"சார், மிதிலா அக்கா சாப்பாடு எடுத்துட்டு போக மறந்துட்டாங்களாம், எங்க சார் குடுத்துட்டு வர சொன்னாரு.", அப்படின்னான் ரொம்ப பவ்யமா.

"இதோ முட்டி போட்டுக்கிட்டு இருக்கு பார் குடுத்துட்டு போ. நல்லா தெம்பா சாப்டுட்டு முட்டி போடட்டும்", அவர் சொல்லவும் அவன் என்னை பார்க்க, "அங்க வச்சுட்டு போ", அப்படின்னு சைகைல சொன்னேன். அவன் என்னை பார்த்து நக்கலா சிரிச்சிட்டு போகும் போது தெரியாது இவன் தான்
அடுத்த வில்லன்னு.

ஒரு வழியா அவர் கிட்ட இருந்து தப்பித்து, மூணாவது பாடவேளை வரை நல்லா தான் போயிட்டு இருந்தது. மூணாவது பாடவேளைக்கு வந்த இயற்பியல் teacher ஜீவா வசந்தி, உள்ள நுழைஞ்சதும் கேட்ட முதல் கேள்வியே

"first hour யாரோடது , எல்லாரும் முட்டி போட்டீங்களா " , இப்படி கேட்டாங்க ரொம்ப சந்தோசமா.


"மிதிலவோட அப்பாதான் கேட்டாரு என்கிட்டே , "உங்க hour-ல முட்டி போட வச்சீங்களானு"", இப்படி அவங்க முடிக்கவும் எல்லாரும் என்ன ஒரே மாதிரி கொலை வெறியோட பார்த்தாங்க. அப்பவே முடிவு பண்ணிட்டேன் எனக்கு அன்னைக்கு சங்குதான்னு.

அந்த hour முடிஞ்சு அடுத்த staff வருவதற்கு இருந்த ரெண்டு நிமிஷ இடைவெளில,
நான் மாத்தி மாத்தி எல்லார்கிட்டயும் தலா 10 அடியாவது வாங்கிருப்பேன். சரி இதோடவாவது முடியும்னு பார்த்த அடுத்த அடுத்து வந்த எல்லா பாடவேளையிலும் இதே கேள்வி கேட்கப்பட, நான் அடி வாங்கிட்டே இருந்தேன்.
அடிக்கும் போது ஒருத்தி மட்டும் நல்லவளா மாறி கேட்டா பாருங்க ஒரு கேள்வி
அப்போதான் என் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தது.
" mithi உங்க அப்பா கடைசி வரை சரியான ஆளுகிட்ட இந்த கேள்விய கேட்கலையா............ பாவம்டி நீ".



Thursday, 22 April 2010

காதல்


காதல் இந்த வார்த்தையக் கேட்டாலே ஏதோ தப்பான ஒன்ணுன்னு நினைக்கறாங்க நம்ம சமூகத்துல. உண்மைல காதல்னா என்னங்க, உண்மையான அன்பு. அது என்னவோ எல்லாரும் காதல்னா கல்யாணமாகத பொண்ணும், பையனும் வீட்டுக்கு தெரியாம செய்யற தப்பான ஒரு விஷயம்னு தான் நினைக்கறாங்க.

ஏன்? எழுபது வயசுக்கு மேல நம்ம தாத்தா, பாட்டி ரெண்டு பேர்க்கு இடையே இருக்கற பாசமும், அக்கறையும் காதல் தானே.

நான் கூட காதல்னா தப்பான ஒன்ணுன்னு தான் நினைச்சு கிட்டு இருந்தேன், ஆனா உண்மையான காதல்னா என்னனு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் புரிஞ்சுக்கிட்டேன்.

அது february 14. எல்லாருக்கும் தெரியும் அன்னைக்கு காதலர் தினம்னு. அன்னைக்கு எங்க வீட்டில எல்லாருக்கும் நாள் எப்பவும் போலதான் போய்ட்டு இருந்தது.
நான் college-கு போய்ட்டு வந்து எப்பவும் போல படிக்காம TV பார்த்துட்டு இருந்தேன். என்னை தவிர எல்லாரும் அவங்க வேலைய சரியாதான் பார்த்துக்கிட்டு இருந்தாங்கனு வச்சுக்குவோம். வெளில போய்ட்டு வந்த அப்பா கைல பார்த்த ஏதோ gift box மாதிரி இருந்தது .

"என்னப்பா இன்னைக்கு lovers day யாராவது propose பண்ணிட்டாங்களா உங்களை"-அப்படினு என் தம்பி கிண்டலா கேட்டு எங்க அப்பா வயித்துல குத்தினான்

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"-அவன சும்மா இருன்னு சைகைல சொல்லிட்டு சமையல் அறைக்குள்ள மெதுவா போன எங்க அப்பா, அம்மாகிட்ட அந்த கிப்ட கொடுத்துட்டு விட்டாரு பாருங்க ஒரு லுக்கு, என்ன ஒரு romantic look தெரியுமா அது.

"என்னது இது"-எதுவுமே தெரியாத ஆளு மாதிரி அம்மா கேட்க

"இன்னைக்கு காதலர் தினம், அதான் கிப்ட் வாங்கிட்டு வந்துருக்கேன்", அப்படினு அசடு வழிஞ்சார் அப்பா.

"என்னது காதலர் தினமா, பரிசா அது சரி பிள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி குதிச்ச கதையா இல்ல இருக்கு"-அப்படினு அம்மா dialog விட

"அம்மா அம்மா please வாங்கிக்கோங்கம்மா", "அப்பா ஆசையா வாங்கிட்டு வந்திருக்கார்ல"
இப்படி நானும் ,அக்காவும் மாத்தி மாதி sound விட அம்மா வாங்கிகிட்டாங்க.

"இதெல்லாம் என்னங்க... இப்போதான் வயசு திரும்புதா என்ன?", அம்மா வாய் சொன்னாலும்
கண் அந்த gift-a அவ்ளோ ஆசையா பார்த்துச்சு. அம்மா முகத்துல எப்பவும் இல்லாத ஒரு வித பொலிவை அன்னைக்கு பார்த்தேன்.

"அம்மா அத திறந்து பாருங்கம்மா, அப்பாவோட selection எப்படி இருக்குனு பார்க்கலாம்", என் தம்பி அவசரப்படுத்த.

அம்மா பொறுமையா, முகத்துல புன் சிரிப்போட அந்த gift-a வெளில எடுத்தாங்க.

முக்கோண வடிவ கண்ணாடி பெட்டிக்கு நடுவுல உள்ள ஒரு சிகப்பு வண்ண velvet மேடைல அழகா 5 ரோஜா, ஒவ்வொன்னும் ஒவ்வொறு sizela அழகா இருந்தது.

"ஹையோ ரொம்ப அழகா இருக்கு", "selection super-pa" இப்படி மாறி மாறி நாங்க புகழ்ந்து தள்ள

"ஏய் அதுக்குள்ள பாரு 5 ரோஜா இருக்கு, அது நாமதான். அந்த பெரிய ரோஜா அப்பா, அதுக்கு பக்கத்துல அடுத்த size-ல இருக்கே அது அம்மா, அடுத்த மூணு குட்டி ரோஜாவும் நம்ம 3 பேரு. அப்பா எவ்ளோ correct-a வாங்கிட்டு வந்திருக்காரு பாரு", அப்படினு அக்கா அத பார்த்து விளக்கம் தர நானும், தம்பியும் "ஹோ" னு கதினோம்.

நாங்க அதை கொண்டு போய் வீட்டு வரவேற்பு அறைல எங்க வைக்கலாம்னு சண்டை போட்டுட்டு இருக்கும் போது அம்மாவும், அப்பாவும் விட்டுக்கிட்டாங்க பாருங்க ஒரு look, அதுல ஆயிரம் அர்த்தங்கள் தெரிஞ்சது எனக்கு.

58 வயசுலயும் அப்பா கண்ல தெரிஞ்ச காதல், காதோரமா நறச்ச முடியோட இருந்தும் வெக்கதுல ரொம்ப அழகா தெரிஞ்ச அம்மா........, சே அந்த நிமிஷத்த என் வாழ்க்கை முழுக்க மறக்க முடியாதுங்க.

அன்னைக்கு முழுக்க அம்மா ஒரு புன்சிரிப்போடாவே தான் வலம் வந்தாங்க. அதுதான் அப்பா அம்மாவுக்கு வாங்கி கொடுத்த முதல் காதலர் தின பரிசு.

அதுக்கு அப்பறம் யோசிச்சு பார்த்தப்பதான் புரிஞ்சது இதுக்கு பேர்தான் உண்மையான
காதல்னு. அப்பா கொஞ்ச நேரம் தாமதமா வந்தாலும் அம்மா வீட்டுக்கும் வாசலுக்கும் நிமிசத்துக்கு ஒரு தடவை நடக்கறது........
அம்மா ஊருக்கு போன அப்பா phone செஞ்சு "எப்போ வர நீ இந்த பிசாசுங்க தொல்லை தாங்க முடியல", அப்படினு எங்களை சாக்கா வச்சுக்கிட்டு அம்மாவ வேகமா வர சொல்றது.............
இதுல எல்லாமே காதல் இருக்கறது புரிஞ்சது........

ஆமாங்க வீட்டுக்கு தெரியாம 20 வயசு பசங்க சந்திச்சு பேசிக்கறதும், காதலர் தினத்துக்கு அவங்க பரிசு பரிமாறிக்கிறதும், பெத்தவங்களே வேணாம்னு சொல்லிட்டு விரும்பினவங்களை கல்யாணம் பண்ணிகிறதுக்கும் பேர் காதல் இல்ல, எத்தனை வயசு ஆனாலும் அதே அன்பு மாறாம, அக்கறையோட இருக்கறது தான் உண்மயான காதல்.

காதல் கல்யாணம் பண்றவங்க கிட்ட மட்டும் தான் காதல் இருக்குன்னு இல்லைங்க,
அந்த காலத்துல கல்யாணத்து அன்னைக்கு தான் கட்டிக்க போறவங்க முகத்தையே பார்த்து இருப்பாங்க, அவங்க கிட்டயும் உண்மையான காதல் இருந்தது.

காதலுக்கான அர்த்தம் எனக்கு 20 வயசுலதான் புரிஞ்சது உங்களுக்கு?

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle