Thursday 24 June, 2010

அறிந்தும் அறியாமலும்



எனை அறியாமல் திரும்பி பார்க்கிறேன்
உன் பெயர் கேட்ட மறு நொடியில்

எனை அறியாமல் உன் பார்வையுடன் பரிமாற்றம் நடக்கிறது
நீ என்னை கடக்கும் அந்த நொடிகளில்

எனை அறியாமல் ரசிக்கிறேன் நீ பேசி விட்டு
பதிலுக்காக காத்திருக்கு அந்த கண நேர மௌனத்தை

எனை அறியாமல் பார்த்து கொண்டிருக்கிறேன்
நீ முகம் பார்த்துவிட்டு சென்ற என் வீட்டு கண்ணாடியை

எனை அறியாமல் தொட்டு பார்த்து கொள்கிறேன்
நீ தொட்டு விட்டு போன என் தோட்டத்து செடியின் இலைகளை

எனை அறியாமல் சிரித்து விடுகிறேன்
நீ முணுமுணுத்த வரிகளை வானொலியில் கேட்கும் போது

எனை அறியாமலே மனனம் செய்து கொள்கிறேன்
நமது நீண்ட உரையாடல்களை

எனை அறிந்தே என் விருப்பத்தை சொல்கிறேன்
நீ கனவுகளில் வரும் பொழுது மட்டும்

எனை அறிந்தே காத்திருக்கிறேன்
நீ காதல் சொல்லும் தருணத்திற்காக

Tuesday 22 June, 2010

மயக்கம்

உன் பிஞ்சு விரல்களின் தொடுகையும்
சின்ன இதழ்களின் உளறலும்
உன் இதயத்துடிப்பை என்ன முடிந்த நெருக்கமும்
என்னை மயங்க செய்யுதடா
உன்னை தூங்க வைக்கும் பெருமுயற்சியில். 

Tuesday 15 June, 2010

முதல் கனாவே


வேப்பங்கொழுந்து ஒன்று பலாவின் சுவை தந்தது
உனை பார்த்த முதல் நிமிடம்

காற்றுடன் கதை பேசினேன், அதன் காதலை பற்றி கேட்கிறேன்
உனை சந்தித்த முதல் மாலையில்

உனை போல் பேசி பார்த்தேன், கண்ணாடியும் கேலி செய்தது
உனை பார்த்த முதல் தினத்தில்

உயரம் சரியோ என்று பலமுறை யோசித்தேன்
எனக்குள் நானே அளந்து கொண்டேனடா உனை

வாசலை தினம் பார்கிறேன் உன் வருகையை எதிர்பார்கிறேன்
என் விலாசம் அறிவாயோ என்பதை மறந்து

நம் கற்பனை சண்டைகளுக்கு வசனங்கள் எழுதி கொண்டேன்
காவியம் ஒன்றாய் அது மாறுமென தவம் இருக்கிறேன்

உன் ரசனை அறியவில்லை இருந்தும் வித விதமாய்
அலங்கரித்து கொண்டேன்

முல்லை மலரும் வேளையிலும் முள்ளாய் தைத்தது உன் நினைவு

நீ என்ன தொடுவானமா, தொட முயன்று தோற்று போனேன்

உன்னுடனான சம்பாஷனைகள் கனவாக தெரியவில்லை
உன்னுடனான வாழ்கைக்கு ஒத்திகையாக தெரிகிறது

கனவுதான் நீ என்று அறிந்தும் உனக்கான வருகையை எதிர்பார்கிறேன்
நீ அதிகாலை கனா என்பதனால்

வந்து விடு என் முதல் கனாவே
நிறைத்து விடு என் பகல் பொழுதுகளையும்

Sunday 6 June, 2010

ஞாபகம் வருதே



அனைவருக்கும்
பள்ளி வாழ்கை என்பது மறக்க முடியாத ஒன்று தானே. அதே போல்தான் எனக்கும் அந்த குறிபிட்ட நாள் 6 வருடமாகியும் மறக்க முடியாத ஒன்றாக ஆனது.

நான் இப்படி எல்லாம் முன்னுரை கொடுக்கவும் ஏதோ நான் வாழ்கையில் மிக பெரிய சாதனை செய்த நாள்னு மட்டும் நினைக்க வேண்டாம். அன்னைகுதான் நாள் முழுக்க கைப்புள்ள மாதிரி சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் அடி வாங்கினேன். சரி உள்ள போவோமா ...

சரி எல்லாரும் கண்ணுக்கு முன்னாடி கொசுவர்த்தி சுருள சுத்தவிடுங்க, அப்புறம் ஆட்டோகிராப் music கண்டிப்பா bockground-ல ஓடணும் (நம்ம பாரம்பரியத்தை மறக்க கூடாதுல)

அப்போ நான் 11-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேங்க. எப்பவும் போல இல்லாம அன்னைக்கு கொஞ்சம் வேகமா துயில் எழாமல் போனதனால அம்மா ரொம்ப பாசமா என்ன அடிச்சு எழுப்பினாங்க. கூடவே நாலு நல்ல வார்த்தை வேற ."அடியே குட்டிபிசாசு, எரும மாடு மாதிரி விடிஞ்சது கூட தெரியாம தூங்கிட்டு இருக்கியே,......(இப்போ கன்னத்துல பாசமா தட்டி, செல்லமா காதை திருகறாங்க -பின்குறிப்பு:ஆனா ரொம்ப வலிச்சது) பொட்ட புள்ள இப்படி தூங்கினா வீடு உருபடறதுக்கா எழுந்திரி டி....

இப்பவும் எழுந்திரிகலைன்னா அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியும்(அது எங்க குடும்ப ரகசியம் வெளில சொல்றதில்லை ) அதனால் நான் கொஞ்சம் கெத்த maintain பண்ணிட்டு எதுவுமே நடக்காத மாதிரி எழுந்திரிச்சேன்.

ரொம்ப அவசரபடாம கிளம்பி, make up எல்லாம் முடிச்சுட்டு கடிகாரத்தை பார்த்தா........ மணி 8.45.

"ஹையோ இன்னும் 15 நிமிஷத்துக்குள்ள போகலைனா அந்தர சல்லி ஆகிடுவியே மிதிலா", இப்படி mind voicela கூவிகிட்டே booksa எல்லாம் பைக்குள்ள அடுக்காம அப்படியே தூக்கி போட்டுகிட்டு baga cycle carrierla மாட்டுனவ அப்படியே போய் இருந்தா எந்த அக்கபோரும் அன்னைக்கு நடந்தே இருக்காது . ரொம்ப நல்ல பொண்ணா "அம்மா schoolku போய்ட்டு வரேன்னு", கத்த
அங்க தான் கதைல turning pointe.

"அடியே காலைல சாப்பிடவே இல்ல சாப்பிடாம போனா உன்ன சாயங்காலம் வீடுக்குள்ள விட மாட்டேன்", என்றபடி அம்மா ஓடி வந்தாங்க

" ய்யோ அம்மா late ஆகிடுச்சு.......", நான் முடிக்கறதுக்குள்ள என் காதை பிடிச்சு திருகி கிட்டே உள்ள கூட்டிட்டு போனவங்க ஒரு தட்ல சாப்பாட போட்டு
ஊட்டி விட்டங்க. இவ்ளோ பாசமா ஊட்டி விடறாங்களேன்னு மட்டும் நினைக்காதீங்க,
"விவசாயி நாத்து நடறது, களை பறிக்கறது , பூச்சி மருந்து அடிக்கறதுல இருந்து ஆரம்பிச்சு.......அதை எங்கப்பா கஷ்டபட்டு schoola பசங்களை அடிச்சு வாத்தியார் வேலை பார்த்து வாங்கின சம்பளத்துல(இருங்க மூச்சு விட்டுக்கறேன்) , அரிசி கடைல போய் அரிசி வாங்கின வரைக்கும் சொல்வாங்க. அத்தனையும் நான் அடி வாங்கி கிட்டே கேட்கணும், சாப்புட வேற செய்யணும், கூடவே வலி தாங்காம அழுகற மாதிரி நடிக்க வேற செய்யணும். ஒரு 16 வயசு பொண்ணு எப்படிங்க இப்படி multiple role பண்ண முடியும், கஷ்டமில்ல(நீங்க அழாதீங்க, கதைய கேளுங்க)

இப்படியே நான் சாபிட்டு முடிக்க 9 மணி ஆகிடுச்சு. அவசர அவசரமா cycle-a எடுத்துகிட்டு schoolku 5 நிமிஷத்துல போய் சேர்ந்தா அங்க classla prayer நடக்குற சத்தம் கேட்டது.என்ன மாதிரியே இன்னும் ரெண்டு பொண்ணுங்க , நாலு பசங்கனு size வாரியா தயங்கி தயங்கி வந்துகிட்டு இருந்தாங்க.

"கடவுளே என்ன மட்டும் காப்பாத்து", அப்படின்னு ரொம்ப நல்ல மனசோட வேண்டிகிட்டு அப்படியே cylce stand பக்கமா போனா அங்க ரொம்ப strictana P.T sir ரவி நின்னுகிட்டு இருந்தாரு. கைல மாட்டை அடிக்கற மாதிரி பெரிய பிரம்பு வேற.
அவர் ஏற்கனவே late-a வந்த பசங்க duck walk பண்றத பார்த்துகிட்டு இருந்தாரு .

பசங்க எல்லாம் காதுல கை வச்சுக்கிட்டு வாத்து மாதிரி நடக்குறதை பார்க்க சிரிப்பா வந்தது. அட என்னை கெட்டவள்னு நினைக்காதீங்க
"துன்பம் வரும் வேலையிலே சிரிங்க " , அப்படின்னு
பெரியவங்க சொல்லி இருக்காங்க (அது யாருக்கு துன்பம் வரும் போதுனு சொல்லலியே.......)

ரவி sir கண்ணுல படாம அப்படியே nicea.... es ஆகிடலாம்னு பார்த்த நான் பழக்க தோசத்துல cycle standல நின்னுகிட்டு இருந்த நாலு cyclea தள்ளி விட்டுட்டு என்னோடதை வைச்சேன..... சத்தம் கேட்டு திருமபிட்டார் நம்ம கதையோட தற்போதய வில்லன் ரவி sir,

"யே யாரது..... பொட்ட புள்ளைக கூட வேகமா வாறது கிடையாது.. யாரு அழகரா வா வா(என் அப்பா அழகர்சாமி அந்த schoola தான் வாத்தியாரா இருந்தாரு ... அதனால அங்க நான் கொஞ்சம் popularunga. எல்லாரும் என்னைய "அழகர்"னு -தான் கூப்பிடுவாங்க )

இப்போ புது பலியாடு மாட்டினதால ரொம்ப சந்தோசமா என்னை நோக்கி வந்தவரு "வாத்தியார் புள்ளையே இப்படி சாவகாசமா வந்தா மத்த புள்ளைக கெட்டு போய்டாது"- வாய் பேசிட்டு இருக்கும் போதே அவர் கைல இருந்த பிரம்பு என் முட்டிக்கு கீழ பேச ஆரம்பிச்சது.....அப்படியே நாலு அடி வாங்கின நான் வாயை மூடிட்டு சும்மா இருக்காம
"sir sir உடம்பு சரி இல்லை அதான்...."-அப்படின்னு இழுத்தேன்.

"என்ன கழுத உடம்புக்கு" அப்படின்னாரு கொஞ்சம் கூட கரிசனமே இல்லாம.

இப்படி கேட்டதுல confuse ஆனா நான் "அ..அ..து வந்து காது வலி sir", அப்படின்னு நெத்தியில கை வைக்க "அப்போ உனக்கு காது என்னை மூளை இருக்கற இடத்துலையா இருக்கு", அப்படின்னு கேட்டு மாத்தி மாத்தி அடிச்ச இடத்துலேயே அடிச்சாரு.

வலி தாங்காம நான் குதிக்க என்னோட நீளமான சடையும் சேர்ந்து ஆடிச்சு. அங்கதான் வச்சாரு கடவுள் எனக்கு அடுத்த ஆப்பு.

என்னோட நீளமான கூந்தல் தெரியணும்னு ribbon வச்சு மடிச்சு கட்டமா அப்படியே விட்டுருந்த ஜடையை பார்த்தவரு "school rules உனக்கு தெரியாது என்ன style வேண்டி இருக்கு உனக்கு......இந்த பொட்ட கழுதைகளே இப்படித்தான்..", இன்னும் நாலு அடி அதிகமா வாங்கினேன்.

அதுக்குள்ள prayer முடிஞ்சு bell அடிக்க "போய் தொலை classku" அப்படின்னு பெரிய மனசு பண்ணி விட்டாரு . கூடவே என் பின்னாடி அடி வாங்க readya நின்னுகிட்டு இருந்த மத்த பசங்களையும் சேர்த்து விட,

"கடவுளே you too ", அப்படின்னு மேல இருக்கறவரை திட்டிகிட்டே கிளாஸ் ரூம்க்கு வந்து சேர்ந்தா அங்க அடுத்த ஆப்பு காத்துகிட்டு இருந்தது..honeybell ரூபத்துல......(எங்க கிளாஸ் teacher தேன்மணி அவர நாங்க செல்லமா honeybell-னு தான் சொல்வோம்).

"May I come in sir ",அப்படின்னு மெதுவா சொன்னேன் ஒட்டு மொத உலகத்துலயும் நான்தான் அப்பிராணி பொண்ணு மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு.

slow motionla திரும்பி பார்த்த honeybell, என்னை பார்த்ததும் ஏதோ அவர் வீட்டுல புகுந்து கொள்ளை அடிச்ச திருடனை பார்க்கற மாதிரியே பார்த்தாரு...என்னை நோக்கி வந்தவரு, கைல இருந்த english bookala என் தலைல நாலு தட்டு தட்டினாரு . அவர் ஒவ்வொரு தடவை தட்டும் போதும் என் மூக்குகண்ணாடி நழுவி கீழே போக அதை நான் சரி பண்ணிகிட்டே அடி வாங்கினேன். இது ஏதோ பெரிய நகைச்சுவை மாதிரி classla இருந்த எல்லாரும் சிரிச்சாங்க(அதுவும் முக்கியமா நாலு பசங்க ரொம்ப சிரிச்சானுக, அவிங்க எல்லாம் எங்க அப்பாகிட்ட அடி வாங்கினவைங்க ) "பன்னி பன்னி என்னைக்காவது ஒழுங்கா இருக்கியா, நீ நேத்து கூட late ஆ தான வந்த", அப்படின்னாரு.

"இல்ல sir", அப்படின்னு பம்மிங்க்ஸ் of இந்தியாவா மாறி சொன்னேன்.

"உன்னை எல்லாம் இப்படியே விட்டா சரிப்பட மாட்ட",
"அச்சோ என்ன பண்ண போறாரு ", இது என் mind voice,
"உங்க அப்பா கிட்ட சொன்னாதான் நீ சரிபட்டு வருவ",
"ச்சே இவ்ளோதான, நான் என்னமோ ஏதோனு பயந்து இல்ல போய்டேன்", mind voice,

ஒரு வழியா பெரிய மனசு பண்ணி என்னை என் இடத்துல போய் உக்கார விட்டாரு.
சரி இனிமேலாவது இந்த நாள் இனிய நாளாக இருக்கணும்னு நினைச்சுட்டு போய் உக்கார்ந்தா

"செம்ம காமெடி டி", என்று எனக்கு ரெண்டு பக்கமும் உக்காந்து இருந்த temprary துரோகிகள்
சிரிச்சாங்க. கடுப்பை control பண்ணிட்டு english booka எடுத்து வச்சா honeybell கிட்ட இருந்து அந்த கொடூர வார்த்தைகள் வந்தது

"எல்லாரும் நான் சொன்ன அந்த ரெண்டு essay படிச்சிட்டு வந்துடீங்களா. போய் வரிசையா உக்கார்ந்து எழுதுங்க போங்க", அப்படின்னு சொன்னாரு. எல்லாரும் ஏதோ எங்களுக்கும் அந்த situation-க்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி குனிஞ்ச தலை நிமிராம உக்காந்திருந்தோம் ஒரு சில கெட்ட தோழர், தோழிகளை தவிர.

"என்ன அந்த 8 பேர் தவிர வேற யாரும் படிச்சுட்டு வரலையா. காலைல வந்த உடனே .................", இப்படி ஆரம்பிச்சவரு தொடர்ந்து 5 நிமிஷம் பேசினாரு. அப்போ அதெலாம் காதுல விழாததினால இப்போ நியாபகம் இல்லை.

"எல்லாரும் வந்து முட்டி போடுங்க", அவர் கடைசியா சொன்னது மட்டும் காதுல விழுந்தது. வேற வழி இல்லாம பசங்க எல்லாம் class-ku வெளியிலும், பொண்ணுங்க உள்ளும் முட்டி போட்டோம்.

"ச்சே இன்னைக்கு நேரமே சரி இல்ல", இப்படி நிறைய பேரோட mind voice கேட்டது.

ஒரு 10 நிமிஷம் போயிருக்கும் , அப்போன்னு பார்த்து சரியாய் ஆஜரானான், என் அப்பாவோட மதிப்பிற்குரிய மாணவன் ஒருத்தன்.

"சார், மிதிலா அக்கா சாப்பாடு எடுத்துட்டு போக மறந்துட்டாங்களாம், எங்க சார் குடுத்துட்டு வர சொன்னாரு.", அப்படின்னான் ரொம்ப பவ்யமா.

"இதோ முட்டி போட்டுக்கிட்டு இருக்கு பார் குடுத்துட்டு போ. நல்லா தெம்பா சாப்டுட்டு முட்டி போடட்டும்", அவர் சொல்லவும் அவன் என்னை பார்க்க, "அங்க வச்சுட்டு போ", அப்படின்னு சைகைல சொன்னேன். அவன் என்னை பார்த்து நக்கலா சிரிச்சிட்டு போகும் போது தெரியாது இவன் தான்
அடுத்த வில்லன்னு.

ஒரு வழியா அவர் கிட்ட இருந்து தப்பித்து, மூணாவது பாடவேளை வரை நல்லா தான் போயிட்டு இருந்தது. மூணாவது பாடவேளைக்கு வந்த இயற்பியல் teacher ஜீவா வசந்தி, உள்ள நுழைஞ்சதும் கேட்ட முதல் கேள்வியே

"first hour யாரோடது , எல்லாரும் முட்டி போட்டீங்களா " , இப்படி கேட்டாங்க ரொம்ப சந்தோசமா.


"மிதிலவோட அப்பாதான் கேட்டாரு என்கிட்டே , "உங்க hour-ல முட்டி போட வச்சீங்களானு"", இப்படி அவங்க முடிக்கவும் எல்லாரும் என்ன ஒரே மாதிரி கொலை வெறியோட பார்த்தாங்க. அப்பவே முடிவு பண்ணிட்டேன் எனக்கு அன்னைக்கு சங்குதான்னு.

அந்த hour முடிஞ்சு அடுத்த staff வருவதற்கு இருந்த ரெண்டு நிமிஷ இடைவெளில,
நான் மாத்தி மாத்தி எல்லார்கிட்டயும் தலா 10 அடியாவது வாங்கிருப்பேன். சரி இதோடவாவது முடியும்னு பார்த்த அடுத்த அடுத்து வந்த எல்லா பாடவேளையிலும் இதே கேள்வி கேட்கப்பட, நான் அடி வாங்கிட்டே இருந்தேன்.
அடிக்கும் போது ஒருத்தி மட்டும் நல்லவளா மாறி கேட்டா பாருங்க ஒரு கேள்வி
அப்போதான் என் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தது.
" mithi உங்க அப்பா கடைசி வரை சரியான ஆளுகிட்ட இந்த கேள்விய கேட்கலையா............ பாவம்டி நீ".



Wednesday 2 June, 2010

வண்ணம் மாறிய வரங்கள்






மனிதா! என்னை தெரிகிறதா!
பயிர்களின் தேவதை நான்
என்னிடம் இருந்த அனைத்து வரங்களையும் உனக்கு விதைகளாய் அளித்துவிட்டேன்

உன் நுண்ணறிவின் நுட்பத்தை என் பயிர் பிள்ளைகளில்
கலப்படத்தை புகுத்தியா அறிய வேண்டும்
விட்டு விடு என் செல்வங்களை
வண்ணம் மாறிய என் வரங்களை காண முடியவில்லையடா

இயல்பை தொலைத்த பயிர்கள் உன் சந்ததியின் உடலை கெடுக்கும்
என்பது உன் அறிவுக்கு எட்டவில்லை போலும்
என் வரங்கள் உன் சந்ததிக்கு சாபங்களாக மாறிக்கொண்டிருகின்றன
முடிந்தால் தடுத்து கொள்

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle