Tuesday 15 June, 2010

முதல் கனாவே


வேப்பங்கொழுந்து ஒன்று பலாவின் சுவை தந்தது
உனை பார்த்த முதல் நிமிடம்

காற்றுடன் கதை பேசினேன், அதன் காதலை பற்றி கேட்கிறேன்
உனை சந்தித்த முதல் மாலையில்

உனை போல் பேசி பார்த்தேன், கண்ணாடியும் கேலி செய்தது
உனை பார்த்த முதல் தினத்தில்

உயரம் சரியோ என்று பலமுறை யோசித்தேன்
எனக்குள் நானே அளந்து கொண்டேனடா உனை

வாசலை தினம் பார்கிறேன் உன் வருகையை எதிர்பார்கிறேன்
என் விலாசம் அறிவாயோ என்பதை மறந்து

நம் கற்பனை சண்டைகளுக்கு வசனங்கள் எழுதி கொண்டேன்
காவியம் ஒன்றாய் அது மாறுமென தவம் இருக்கிறேன்

உன் ரசனை அறியவில்லை இருந்தும் வித விதமாய்
அலங்கரித்து கொண்டேன்

முல்லை மலரும் வேளையிலும் முள்ளாய் தைத்தது உன் நினைவு

நீ என்ன தொடுவானமா, தொட முயன்று தோற்று போனேன்

உன்னுடனான சம்பாஷனைகள் கனவாக தெரியவில்லை
உன்னுடனான வாழ்கைக்கு ஒத்திகையாக தெரிகிறது

கனவுதான் நீ என்று அறிந்தும் உனக்கான வருகையை எதிர்பார்கிறேன்
நீ அதிகாலை கனா என்பதனால்

வந்து விடு என் முதல் கனாவே
நிறைத்து விடு என் பகல் பொழுதுகளையும்

5 comments:

  1. awesome lines... so much feel in it ... great mithi

    ReplyDelete
  2. Nice thoughts :) Simply gr8 d. Continue ur good work.

    ReplyDelete
  3. I know about u more than anyone I hope :) Nice feelings de .

    ReplyDelete
  4. superrrrrrrb ....very nice:-):-):-)

    ReplyDelete

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle