Sunday 6 June, 2010

ஞாபகம் வருதே



அனைவருக்கும்
பள்ளி வாழ்கை என்பது மறக்க முடியாத ஒன்று தானே. அதே போல்தான் எனக்கும் அந்த குறிபிட்ட நாள் 6 வருடமாகியும் மறக்க முடியாத ஒன்றாக ஆனது.

நான் இப்படி எல்லாம் முன்னுரை கொடுக்கவும் ஏதோ நான் வாழ்கையில் மிக பெரிய சாதனை செய்த நாள்னு மட்டும் நினைக்க வேண்டாம். அன்னைகுதான் நாள் முழுக்க கைப்புள்ள மாதிரி சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் அடி வாங்கினேன். சரி உள்ள போவோமா ...

சரி எல்லாரும் கண்ணுக்கு முன்னாடி கொசுவர்த்தி சுருள சுத்தவிடுங்க, அப்புறம் ஆட்டோகிராப் music கண்டிப்பா bockground-ல ஓடணும் (நம்ம பாரம்பரியத்தை மறக்க கூடாதுல)

அப்போ நான் 11-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேங்க. எப்பவும் போல இல்லாம அன்னைக்கு கொஞ்சம் வேகமா துயில் எழாமல் போனதனால அம்மா ரொம்ப பாசமா என்ன அடிச்சு எழுப்பினாங்க. கூடவே நாலு நல்ல வார்த்தை வேற ."அடியே குட்டிபிசாசு, எரும மாடு மாதிரி விடிஞ்சது கூட தெரியாம தூங்கிட்டு இருக்கியே,......(இப்போ கன்னத்துல பாசமா தட்டி, செல்லமா காதை திருகறாங்க -பின்குறிப்பு:ஆனா ரொம்ப வலிச்சது) பொட்ட புள்ள இப்படி தூங்கினா வீடு உருபடறதுக்கா எழுந்திரி டி....

இப்பவும் எழுந்திரிகலைன்னா அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியும்(அது எங்க குடும்ப ரகசியம் வெளில சொல்றதில்லை ) அதனால் நான் கொஞ்சம் கெத்த maintain பண்ணிட்டு எதுவுமே நடக்காத மாதிரி எழுந்திரிச்சேன்.

ரொம்ப அவசரபடாம கிளம்பி, make up எல்லாம் முடிச்சுட்டு கடிகாரத்தை பார்த்தா........ மணி 8.45.

"ஹையோ இன்னும் 15 நிமிஷத்துக்குள்ள போகலைனா அந்தர சல்லி ஆகிடுவியே மிதிலா", இப்படி mind voicela கூவிகிட்டே booksa எல்லாம் பைக்குள்ள அடுக்காம அப்படியே தூக்கி போட்டுகிட்டு baga cycle carrierla மாட்டுனவ அப்படியே போய் இருந்தா எந்த அக்கபோரும் அன்னைக்கு நடந்தே இருக்காது . ரொம்ப நல்ல பொண்ணா "அம்மா schoolku போய்ட்டு வரேன்னு", கத்த
அங்க தான் கதைல turning pointe.

"அடியே காலைல சாப்பிடவே இல்ல சாப்பிடாம போனா உன்ன சாயங்காலம் வீடுக்குள்ள விட மாட்டேன்", என்றபடி அம்மா ஓடி வந்தாங்க

" ய்யோ அம்மா late ஆகிடுச்சு.......", நான் முடிக்கறதுக்குள்ள என் காதை பிடிச்சு திருகி கிட்டே உள்ள கூட்டிட்டு போனவங்க ஒரு தட்ல சாப்பாட போட்டு
ஊட்டி விட்டங்க. இவ்ளோ பாசமா ஊட்டி விடறாங்களேன்னு மட்டும் நினைக்காதீங்க,
"விவசாயி நாத்து நடறது, களை பறிக்கறது , பூச்சி மருந்து அடிக்கறதுல இருந்து ஆரம்பிச்சு.......அதை எங்கப்பா கஷ்டபட்டு schoola பசங்களை அடிச்சு வாத்தியார் வேலை பார்த்து வாங்கின சம்பளத்துல(இருங்க மூச்சு விட்டுக்கறேன்) , அரிசி கடைல போய் அரிசி வாங்கின வரைக்கும் சொல்வாங்க. அத்தனையும் நான் அடி வாங்கி கிட்டே கேட்கணும், சாப்புட வேற செய்யணும், கூடவே வலி தாங்காம அழுகற மாதிரி நடிக்க வேற செய்யணும். ஒரு 16 வயசு பொண்ணு எப்படிங்க இப்படி multiple role பண்ண முடியும், கஷ்டமில்ல(நீங்க அழாதீங்க, கதைய கேளுங்க)

இப்படியே நான் சாபிட்டு முடிக்க 9 மணி ஆகிடுச்சு. அவசர அவசரமா cycle-a எடுத்துகிட்டு schoolku 5 நிமிஷத்துல போய் சேர்ந்தா அங்க classla prayer நடக்குற சத்தம் கேட்டது.என்ன மாதிரியே இன்னும் ரெண்டு பொண்ணுங்க , நாலு பசங்கனு size வாரியா தயங்கி தயங்கி வந்துகிட்டு இருந்தாங்க.

"கடவுளே என்ன மட்டும் காப்பாத்து", அப்படின்னு ரொம்ப நல்ல மனசோட வேண்டிகிட்டு அப்படியே cylce stand பக்கமா போனா அங்க ரொம்ப strictana P.T sir ரவி நின்னுகிட்டு இருந்தாரு. கைல மாட்டை அடிக்கற மாதிரி பெரிய பிரம்பு வேற.
அவர் ஏற்கனவே late-a வந்த பசங்க duck walk பண்றத பார்த்துகிட்டு இருந்தாரு .

பசங்க எல்லாம் காதுல கை வச்சுக்கிட்டு வாத்து மாதிரி நடக்குறதை பார்க்க சிரிப்பா வந்தது. அட என்னை கெட்டவள்னு நினைக்காதீங்க
"துன்பம் வரும் வேலையிலே சிரிங்க " , அப்படின்னு
பெரியவங்க சொல்லி இருக்காங்க (அது யாருக்கு துன்பம் வரும் போதுனு சொல்லலியே.......)

ரவி sir கண்ணுல படாம அப்படியே nicea.... es ஆகிடலாம்னு பார்த்த நான் பழக்க தோசத்துல cycle standல நின்னுகிட்டு இருந்த நாலு cyclea தள்ளி விட்டுட்டு என்னோடதை வைச்சேன..... சத்தம் கேட்டு திருமபிட்டார் நம்ம கதையோட தற்போதய வில்லன் ரவி sir,

"யே யாரது..... பொட்ட புள்ளைக கூட வேகமா வாறது கிடையாது.. யாரு அழகரா வா வா(என் அப்பா அழகர்சாமி அந்த schoola தான் வாத்தியாரா இருந்தாரு ... அதனால அங்க நான் கொஞ்சம் popularunga. எல்லாரும் என்னைய "அழகர்"னு -தான் கூப்பிடுவாங்க )

இப்போ புது பலியாடு மாட்டினதால ரொம்ப சந்தோசமா என்னை நோக்கி வந்தவரு "வாத்தியார் புள்ளையே இப்படி சாவகாசமா வந்தா மத்த புள்ளைக கெட்டு போய்டாது"- வாய் பேசிட்டு இருக்கும் போதே அவர் கைல இருந்த பிரம்பு என் முட்டிக்கு கீழ பேச ஆரம்பிச்சது.....அப்படியே நாலு அடி வாங்கின நான் வாயை மூடிட்டு சும்மா இருக்காம
"sir sir உடம்பு சரி இல்லை அதான்...."-அப்படின்னு இழுத்தேன்.

"என்ன கழுத உடம்புக்கு" அப்படின்னாரு கொஞ்சம் கூட கரிசனமே இல்லாம.

இப்படி கேட்டதுல confuse ஆனா நான் "அ..அ..து வந்து காது வலி sir", அப்படின்னு நெத்தியில கை வைக்க "அப்போ உனக்கு காது என்னை மூளை இருக்கற இடத்துலையா இருக்கு", அப்படின்னு கேட்டு மாத்தி மாத்தி அடிச்ச இடத்துலேயே அடிச்சாரு.

வலி தாங்காம நான் குதிக்க என்னோட நீளமான சடையும் சேர்ந்து ஆடிச்சு. அங்கதான் வச்சாரு கடவுள் எனக்கு அடுத்த ஆப்பு.

என்னோட நீளமான கூந்தல் தெரியணும்னு ribbon வச்சு மடிச்சு கட்டமா அப்படியே விட்டுருந்த ஜடையை பார்த்தவரு "school rules உனக்கு தெரியாது என்ன style வேண்டி இருக்கு உனக்கு......இந்த பொட்ட கழுதைகளே இப்படித்தான்..", இன்னும் நாலு அடி அதிகமா வாங்கினேன்.

அதுக்குள்ள prayer முடிஞ்சு bell அடிக்க "போய் தொலை classku" அப்படின்னு பெரிய மனசு பண்ணி விட்டாரு . கூடவே என் பின்னாடி அடி வாங்க readya நின்னுகிட்டு இருந்த மத்த பசங்களையும் சேர்த்து விட,

"கடவுளே you too ", அப்படின்னு மேல இருக்கறவரை திட்டிகிட்டே கிளாஸ் ரூம்க்கு வந்து சேர்ந்தா அங்க அடுத்த ஆப்பு காத்துகிட்டு இருந்தது..honeybell ரூபத்துல......(எங்க கிளாஸ் teacher தேன்மணி அவர நாங்க செல்லமா honeybell-னு தான் சொல்வோம்).

"May I come in sir ",அப்படின்னு மெதுவா சொன்னேன் ஒட்டு மொத உலகத்துலயும் நான்தான் அப்பிராணி பொண்ணு மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு.

slow motionla திரும்பி பார்த்த honeybell, என்னை பார்த்ததும் ஏதோ அவர் வீட்டுல புகுந்து கொள்ளை அடிச்ச திருடனை பார்க்கற மாதிரியே பார்த்தாரு...என்னை நோக்கி வந்தவரு, கைல இருந்த english bookala என் தலைல நாலு தட்டு தட்டினாரு . அவர் ஒவ்வொரு தடவை தட்டும் போதும் என் மூக்குகண்ணாடி நழுவி கீழே போக அதை நான் சரி பண்ணிகிட்டே அடி வாங்கினேன். இது ஏதோ பெரிய நகைச்சுவை மாதிரி classla இருந்த எல்லாரும் சிரிச்சாங்க(அதுவும் முக்கியமா நாலு பசங்க ரொம்ப சிரிச்சானுக, அவிங்க எல்லாம் எங்க அப்பாகிட்ட அடி வாங்கினவைங்க ) "பன்னி பன்னி என்னைக்காவது ஒழுங்கா இருக்கியா, நீ நேத்து கூட late ஆ தான வந்த", அப்படின்னாரு.

"இல்ல sir", அப்படின்னு பம்மிங்க்ஸ் of இந்தியாவா மாறி சொன்னேன்.

"உன்னை எல்லாம் இப்படியே விட்டா சரிப்பட மாட்ட",
"அச்சோ என்ன பண்ண போறாரு ", இது என் mind voice,
"உங்க அப்பா கிட்ட சொன்னாதான் நீ சரிபட்டு வருவ",
"ச்சே இவ்ளோதான, நான் என்னமோ ஏதோனு பயந்து இல்ல போய்டேன்", mind voice,

ஒரு வழியா பெரிய மனசு பண்ணி என்னை என் இடத்துல போய் உக்கார விட்டாரு.
சரி இனிமேலாவது இந்த நாள் இனிய நாளாக இருக்கணும்னு நினைச்சுட்டு போய் உக்கார்ந்தா

"செம்ம காமெடி டி", என்று எனக்கு ரெண்டு பக்கமும் உக்காந்து இருந்த temprary துரோகிகள்
சிரிச்சாங்க. கடுப்பை control பண்ணிட்டு english booka எடுத்து வச்சா honeybell கிட்ட இருந்து அந்த கொடூர வார்த்தைகள் வந்தது

"எல்லாரும் நான் சொன்ன அந்த ரெண்டு essay படிச்சிட்டு வந்துடீங்களா. போய் வரிசையா உக்கார்ந்து எழுதுங்க போங்க", அப்படின்னு சொன்னாரு. எல்லாரும் ஏதோ எங்களுக்கும் அந்த situation-க்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி குனிஞ்ச தலை நிமிராம உக்காந்திருந்தோம் ஒரு சில கெட்ட தோழர், தோழிகளை தவிர.

"என்ன அந்த 8 பேர் தவிர வேற யாரும் படிச்சுட்டு வரலையா. காலைல வந்த உடனே .................", இப்படி ஆரம்பிச்சவரு தொடர்ந்து 5 நிமிஷம் பேசினாரு. அப்போ அதெலாம் காதுல விழாததினால இப்போ நியாபகம் இல்லை.

"எல்லாரும் வந்து முட்டி போடுங்க", அவர் கடைசியா சொன்னது மட்டும் காதுல விழுந்தது. வேற வழி இல்லாம பசங்க எல்லாம் class-ku வெளியிலும், பொண்ணுங்க உள்ளும் முட்டி போட்டோம்.

"ச்சே இன்னைக்கு நேரமே சரி இல்ல", இப்படி நிறைய பேரோட mind voice கேட்டது.

ஒரு 10 நிமிஷம் போயிருக்கும் , அப்போன்னு பார்த்து சரியாய் ஆஜரானான், என் அப்பாவோட மதிப்பிற்குரிய மாணவன் ஒருத்தன்.

"சார், மிதிலா அக்கா சாப்பாடு எடுத்துட்டு போக மறந்துட்டாங்களாம், எங்க சார் குடுத்துட்டு வர சொன்னாரு.", அப்படின்னான் ரொம்ப பவ்யமா.

"இதோ முட்டி போட்டுக்கிட்டு இருக்கு பார் குடுத்துட்டு போ. நல்லா தெம்பா சாப்டுட்டு முட்டி போடட்டும்", அவர் சொல்லவும் அவன் என்னை பார்க்க, "அங்க வச்சுட்டு போ", அப்படின்னு சைகைல சொன்னேன். அவன் என்னை பார்த்து நக்கலா சிரிச்சிட்டு போகும் போது தெரியாது இவன் தான்
அடுத்த வில்லன்னு.

ஒரு வழியா அவர் கிட்ட இருந்து தப்பித்து, மூணாவது பாடவேளை வரை நல்லா தான் போயிட்டு இருந்தது. மூணாவது பாடவேளைக்கு வந்த இயற்பியல் teacher ஜீவா வசந்தி, உள்ள நுழைஞ்சதும் கேட்ட முதல் கேள்வியே

"first hour யாரோடது , எல்லாரும் முட்டி போட்டீங்களா " , இப்படி கேட்டாங்க ரொம்ப சந்தோசமா.


"மிதிலவோட அப்பாதான் கேட்டாரு என்கிட்டே , "உங்க hour-ல முட்டி போட வச்சீங்களானு"", இப்படி அவங்க முடிக்கவும் எல்லாரும் என்ன ஒரே மாதிரி கொலை வெறியோட பார்த்தாங்க. அப்பவே முடிவு பண்ணிட்டேன் எனக்கு அன்னைக்கு சங்குதான்னு.

அந்த hour முடிஞ்சு அடுத்த staff வருவதற்கு இருந்த ரெண்டு நிமிஷ இடைவெளில,
நான் மாத்தி மாத்தி எல்லார்கிட்டயும் தலா 10 அடியாவது வாங்கிருப்பேன். சரி இதோடவாவது முடியும்னு பார்த்த அடுத்த அடுத்து வந்த எல்லா பாடவேளையிலும் இதே கேள்வி கேட்கப்பட, நான் அடி வாங்கிட்டே இருந்தேன்.
அடிக்கும் போது ஒருத்தி மட்டும் நல்லவளா மாறி கேட்டா பாருங்க ஒரு கேள்வி
அப்போதான் என் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தது.
" mithi உங்க அப்பா கடைசி வரை சரியான ஆளுகிட்ட இந்த கேள்விய கேட்கலையா............ பாவம்டி நீ".



7 comments:

  1. Hi
    Its really interesting :).

    i appreciate the way you wrote"But it will be good if you change the staff names"

    After a long time our class rooms came in to mind.

    But i still wonder is this same "Mithila alagarsamy" where i saw in 11th Std..

    Nice work Keep it up. :)

    ReplyDelete
  2. i was waiting for the pics u gonna choose for this story... again itz nice.. way to go!!!

    ReplyDelete
  3. he da ......superb nama class mind voice innum nalla erukum...thn superrb da.....nice....zooo nd bot sir pathi yathathu.....??im waitng... :) gud...

    ReplyDelete
  4. innum zoology sir pathi ninaichale bayama iruku eppadi eludharadhu?

    ReplyDelete
  5. அது எப்படி மிதிலா உன்ன பாத்ததும் இது ஒரு காமெடி pieceனு கண்டுபிடிக்கிறாங்க.
    இப்படி அடி வாங்குற அளவுக்கு எந்த schoolல படிச்ச..

    ReplyDelete
  6. மொத்தமா எத்தனை அடி வாங்கநீங்கனு ஞாபகம் இருக்கா?

    ReplyDelete
  7. Super Mithila. After a long time I imagine 11 the B.

    ReplyDelete

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle