Tuesday 13 July, 2010

அழகிய சிறை



எத்தனை முறை பார்த்தாலும் என் கண்ணாடி என்னை
அழகாய் காட்டவில்லையடா உன் கருவிழி போல.

உன் கருவிழிக்குள் சிக்கித் தவிக்கும்
என் சுந்தர வதனத்தை காணவே தினம் உன் விழி நோக்குகிறேன்

அப்படி என்ன அதிசயமான பாதரசம் பூசி உள்ளாய்
உன் விழிச் சிறைக்கு

எத்தனை முறை நீ விடுவித்தாலும் தானாக வந்து அடைப்பட்டு
கொள்கிறேன் அந்த அழகிய சிறைக்குள்

6 comments: