Friday 10 September, 2010

ஊடல்

சில மணி நேரத்திற்குள் புயலும், தென்றலும்                                      மாற்றி மாற்றி
வீச முடியுமா ஒரு இடத்தில
இல்லை என்றால் நுழைந்து பார் என் இதயத்தினுள்
எல்லா வானிலை மாற்றமும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது
என்னுள் உன்னால்
        



                                                                                         

அதெப்படி உன்னை அடிக்கும் பொழுதுகளில் மட்டும்
மென்மை கூடி விடுகிறது என் கைகளில்?
வலிக்கவே இல்லை என்று அடம் செய்கிறாய் 
 

என்ன மாயம் செய்தாய் உன்னை கண்டால்
என் கோபங்கள் கூட கவிதைகளாக மாறி
என்னை இம்சிக்கிறது                    

                                                        

உன் காதுகளை கடிந்து கொள்கிறேன்
நீ தூங்கும் பொழுதுகளில் தேவையற்ற சப்தங்களை கேட்டு உன்னை எழுப்பி விடுகிறதே

1 comment:

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle