Wednesday 2 June, 2010

வண்ணம் மாறிய வரங்கள்






மனிதா! என்னை தெரிகிறதா!
பயிர்களின் தேவதை நான்
என்னிடம் இருந்த அனைத்து வரங்களையும் உனக்கு விதைகளாய் அளித்துவிட்டேன்

உன் நுண்ணறிவின் நுட்பத்தை என் பயிர் பிள்ளைகளில்
கலப்படத்தை புகுத்தியா அறிய வேண்டும்
விட்டு விடு என் செல்வங்களை
வண்ணம் மாறிய என் வரங்களை காண முடியவில்லையடா

இயல்பை தொலைத்த பயிர்கள் உன் சந்ததியின் உடலை கெடுக்கும்
என்பது உன் அறிவுக்கு எட்டவில்லை போலும்
என் வரங்கள் உன் சந்ததிக்கு சாபங்களாக மாறிக்கொண்டிருகின்றன
முடிந்தால் தடுத்து கொள்

5 comments: