Monday 11 October, 2010

வேண்டும் இந்த அவஸ்தைகள்


என்றும் தாண்டி செல்லும் தெருவோர பிள்ளையாருக்கு
லஞ்சமாய் மூன்று தோப்புகரணம் போட்டு

பரீட்சை அட்டையில் எம்மதமும் சம்மதமாய்
அனைத்து கடவுள்களின் படங்களையும்  ஒட்டி

முன்னிருக்கை மாணவன் வேகமாக பதில் எழுத
அதை பார்த்து பதில் மறந்த நிமிடம் கடந்து

காற்றாடி இருந்தும் வேர்த்து கொட்டி
விடைத்தாளை நனைத்து

கடைசி நேரத்தில் கோணல் மாணலாய்
நூல் சேர்த்து கட்டி  விடைத்தாளை வழியனுப்பி
பெருமூச்சு விட்டு

இவை அனைத்தும் வாழ்வில் மீண்டும்
வேண்டுமென ஏங்கும் அவஸ்தைகள்

 

4 comments:

  1. Very nice kavithai. You have very good talent in writing kavithai
    By
    Suba

    ReplyDelete
  2. @suba:Thank you suba :)

    @Ranga: Thank you :)

    ReplyDelete
  3. ஒரு நொடி பொழுதில் பல நினைவுகளை கொண்டு வந்த கவிதை இது. அழகான கவிதை.. வாழ்த்துக்கள் மிதிலா!! தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle