Wednesday, 22 September 2010

மௌன மொழி


என் மௌனத்தின் வார்த்தைகளை
உன் புன்முறுவலில் வாசித்த நேரம்,
உன் கண்கள் என் நாணத்தை கண்டு கொண்டதோ?

நம் மௌனம் வெல்லும் சந்திப்புகள்
நீண்டு கொண்டே செல்கின்றன
இருந்தும் ஆவல் கொண்டேன் மௌன மொழி கற்பதற்கு

வார்த்தைகள் ஆயிரம் உதிர்த்தும்
உன் ஒற்றை பார்வையின் காதலை
அது சொல்லாததேன்?

பேச தெரிந்தும் ஊமையான இதழ்களுக்கு
மௌன மொழியின் மீது உள்ள காதலை யார் அறிவார்?

இந்த மௌன உலகத்திற்குள் சஞ்சரிக்கும் முன்
தெரிந்திருக்கவில்லை வெளியே செல்ல முடியாதென்று
தெரிந்த பின் கவலை கொள்ளவில்லை
வெளிய செல்வதற்கு

Friday, 10 September 2010

ஊடல்

சில மணி நேரத்திற்குள் புயலும், தென்றலும்                                      மாற்றி மாற்றி
வீச முடியுமா ஒரு இடத்தில
இல்லை என்றால் நுழைந்து பார் என் இதயத்தினுள்
எல்லா வானிலை மாற்றமும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது
என்னுள் உன்னால்
        



                                                                                         

அதெப்படி உன்னை அடிக்கும் பொழுதுகளில் மட்டும்
மென்மை கூடி விடுகிறது என் கைகளில்?
வலிக்கவே இல்லை என்று அடம் செய்கிறாய் 
 

என்ன மாயம் செய்தாய் உன்னை கண்டால்
என் கோபங்கள் கூட கவிதைகளாக மாறி
என்னை இம்சிக்கிறது                    

                                                        

உன் காதுகளை கடிந்து கொள்கிறேன்
நீ தூங்கும் பொழுதுகளில் தேவையற்ற சப்தங்களை கேட்டு உன்னை எழுப்பி விடுகிறதே

Thursday, 26 August 2010

ஏன்




என் வாழ்வினில் சிறப்பானதேன்?
உனை நெஞ்சம் ரசித்த நொடி

என்  நெஞ்சமும்  மறக்காததேன் 
நம் முதல் சந்திப்பினை

என் செவிகளும்  சேமித்ததேன்?  
 உன் முதல் வார்த்தைகளை

என் கால்களும் கெஞ்சுவதேன்
 உன் வீடு நோக்கி செல்ல

என் நாணமும் மிஞ்சுவதேன் 
உன் விழிகளை பார்க்கையிலே

Thursday, 5 August 2010

மாற்றப்படாத நியதிகள்



மான் கொன்று,
மரம் துளைத்து,
புலி மீது வில் பாய செய்ய
வித்தகன் இன்று இல்லை

ஆனால் வள்ளுவனின் வாசுகியாய் இன்றைய பெண்ணும்
இருக்க வேண்டுமென வரையறை செய்வார்

கல் தூக்கி தீரம் காட்ட,
ராமன் போல் ஒழுக்கம் கொள்ள,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு பெண்ணும் நிலம் பார்த்து பேச,
நிலமகள் நோகாமல் நடக்க வேண்டுமென்பார்

நீதியோடு வரி கட்ட,
நியாயதோடு ஓட்டு போட,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு ஆளுமையும் மனுநீதிசோழனின்
காலத்திற்கு நிகராய் இருக்க வேண்டுமென்பார்

இவை யாவும்  மாற்றப்படாத நியதிகள் 
மற்றும் மாற்றமுடியா நியதிகள்

Wednesday, 4 August 2010

துவக்கமும் முடிவும்

அன்பின் அழகே
சர்வமும் அழகு உன் கருவிழிக்குள்ளே

கருவிழி சிறையினுள் சிக்கி கொண்டேன்
மீள வழி இருந்தும் விருப்பம் இல்லை

இல்லை என் நினைவில் வேறொன்றும்
உனை பற்றி நினைக்க துவங்கினால்

துவங்குவேன் ஒவ்வொரு பொழுதையும் உன்
மலர்ந்த புன்னகை முகம் பார்த்து

பார்த்து பார்த்து சேகரித்து கொண்டேன்
உன் வார்த்தைகளில் இருந்த அன்பை

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle