Thursday 8 April, 2010

வெளிப்பாடு



என் புன்சிரிப்பை பார்த்தே மயங்கினாய்
என் தள்ளாடிய ந்டையை பார்த்தே பெருமிதம் கொண்டாய்
என் எச்சில் சோற்றை அமிர்தம் என்றாய்
நான் தூக்கம் வந்து கண்களை கசக்கினால்
என் நெற்றியில் முத்தமிட்டு என்னை உன் தோள்களில் சாய்த்துக் கொண்டாய்
சொற்கள் அற்ற செயல்களால் உன் காதலை வெளிப்படுத்தி விட்டாய்
ஒரு வயதே நிரம்பிய என்னால் சொற்களால் வெளிப்படுத்த முடியாத
காதலை உன் கன்னத்தில் இடும் எச்சில் நிறைந்த
முத்தத்தின் மூலம் புரிந்து கொள்- அம்மா

2 comments:

  1. என்னை சுவாசிக்க வைத்த அவளுக்கு நன் வாசித்த முதல் கவிதை "அம்மா "!

    ReplyDelete

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle